தினசரி மன்னா
0
0
579
இது எவ்வளவு முக்கியம்?
Monday, 28th of August 2023
Categories :
நற்செய்தி (Gospel)
“நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.”
நீதிமொழிகள் 11:30
ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, அவருக்குப் பக்கத்தில் மற்றொரு இளைஞன் நடந்து வந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்த தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் கவரப்பட்ட இந்த இளைஞன் தான் அழைத்த ஆராதனைக்கு சென்றான்.
ஒரு சிறிய அறையில் இந்த ஆராதனை நடைபெற்றது, மிகக் குறைவான மக்கள் இருந்தனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இந்த இளைஞனைத் தொடுவதைத் தடுக்கவில்லை. அதனால் அந்த இரவில், தேவன் இந்த இளைஞனைத் தொட்டார், தற்கொலை எண்ணங்கள் அனைத்தும் மறைந்தன. இந்த இளைஞன் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா - அது நான்தான்.
நான் எப்பொழுதும் கற்பனை செய்து பார்ப்பேன், "இந்தப் இளைஞன் என்னிடம் இயேசுவைப் பற்றிச் சொல்லாவிட்டால் என்ன செய்து இருப்பேன்? நான் இப்போது எங்கே இருiந்திருப்பேன்?"
நம் சொந்த நலன்களில் மூழ்குவது மிகவும் எளிதானது, நித்தியத்தையும் நம்மைச் சுற்றியுள்ள அழிந்துவரும் ஆத்துமாக்களையும் நாம் இழக்கிறோம்.
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஒரு வழி, உங்கள் சாட்சியை உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வது. ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தேவனிடம் கேளுங்கள். உங்கள் சாட்சி எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது மக்களை அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கான தேவனின் வல்லமையைக் கொண்டுள்ளது.
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த மற்றொரு வழி, சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உங்கள் நேரத்தையும், திறமையையும், பொக்கிஷத்தையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் யாரையாவது கர்த்தரிடம் வழிநடத்தியிருந்தால், வளர சரியான வழியைக் கண்டுபிடிக்க அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள். அவர்கள் வேதத்தை வாசிக்க அவர்களை ஊக்குவிக்கவும். அவர்களை அழைக்கவும் அல்லது வேதத்தை போதிக்கும் விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு நல்ல தேவாலயத்திற்கு அவர்களை வழிநடத்தவும். ( மத்தேயு 28:19-20 ) இன்றைய காலங்களில், ஆன்லைன் சேவைகளைப் பார்க்க அவர்களை நீங்கள் அழைக்கலாம்.
ஜெபம்
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
பிதாவே, இயேசுவின் நாமத்தில், என்னை ஆத்துமா ஆத்தும ஆதாயப்படுத்துபவனாக மாற்றியதற்கு நன்றி. உமது ராஜ்யத்தில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த உமது ஆவியால் எனக்கு அதிகாரம் தாரும். இரட்சிப்பின் நற்செய்தியை என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றி. ஆமென்!
குடும்ப இரட்சிப்பு
பிதாவே, உமது வார்த்தை கூறுகிறது, "“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" (யோவான் 6:44). என் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் உமது குமாரனாகிய இயேசுவிடம் இழுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், அவர்கள் உம்மை தனிப்பட்ட முறையில் அறிந்து, உம்முடன் நித்தியத்தை செலவிடுவார்கள்.
பொருளாதார ஆசீர்வாதம்
ஓ ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஆதாயமற்ற மற்றும் பயனற்ற உழைப்பிலிருந்து என்னை விடுவியும். என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதியும்.
இனி எனது தொழில் மற்றும் ஊழியத்தின் ஆரம்பம் முதல் எனது அனைத்து உழைப்பும் இயேசுவின் நாமத்தில் முழு ஆதாயத்தை அளிக்கத் தொடங்கும்.
கேஎஸ்எம் சபை:
பிதாவே, பாஸ்டர் மைக்கேல், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் அனைவரும் சுகத்துடன் இருக்க இயேசுவின் நாமத்தில் பிரார்த்திக்கிறேன். உமது சமாதானம் அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சூழ்ந்திருக்கட்டும்.
தேசம்:
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்த தேசத்தை நிர்வகிக்க ஞானமும் புரிதலும் உள்ள தலைவர்களையும், சகோதர சகோதரிகளையும் எழுப்பும்.
ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தேவனின் எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்● கத்தரிக்கும் பருவங்கள் -1
● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் II
● வேதாகம செழிப்புக்கான இரகசியங்கள்
● ஆயத்தமில்லாத உலகில் ஆயத்தநிலை
● பயனுள்ள 40 நாட்கள் உபவாச ஜெபத்திற்கான வழிகாட்டுதல்கள்
● தேவ வகையான விசுவாசம்
கருத்துகள்