हिंदी मराठी తెలుగు മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us Contact us Listen on Spotify Listen on Spotify Download on the App StoreDownload iOS App Get it on Google Play Download Android App
 
Login
Online Giving
Login
  • Home
  • Events
  • Live
  • TV
  • NoahTube
  • Praises
  • News
  • Manna
  • Prayers
  • Confessions
  • Dreams
  • E-Books
  • Commentary
  • Obituaries
  • Oasis
  1. Home
  2. Daily Manna
  3. மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம்: பழக்கம் எண். 7
Daily Manna

மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம்: பழக்கம் எண். 7

Friday, 16th of January 2026
1 0 180
Categories : மிகவும் பயனுள்ள நபர்களின் 9 பழக்கம் (9 Habits of Highly Effective People)
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.”
‭‭யோவான்‬ ‭12‬:‭24‬ ‭

உங்களுக்காக நீங்கள் வைத்துக்கொள்வது இறுதியில் குறைகிறது, ஆனால் நீங்கள் தேவினிடம் ஒப்புக்கொடுப்பது பல மடங்கு அதிகரிக்கிறது என்பதை மிகவும் பயனுள்ள மக்கள் புரிந்துகொள்கிறார்கள். நீடித்த தாக்கம் ஒருபோதும் ஆறுதலிலிருந்து பிறப்பதில்லை, ஆனால் அர்ப்பணிப்பிலிருந்து பிறக்கிறது என்று வேதம் வெளிப்படுத்துகிறது. சுயம் பாதுகாக்கப்படும் இடத்தில் இலக்கு வளர்வதில்லை - சுயம் சாம்பலாக்கப்படும் இடத்தில் அது வளரும்.

தியாகம் இழப்பல்ல; அது ஒரு முதலீடு.

1. ஒப்புக்கொடுதல் மூலம் ராஜ்யம் சுதன்தரிக்கபடுகின்றது 

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, எதையாவது விட்டுக்கொடுக்கத் ஆயத்தமாக இருக்கும் ஜனங்கள் மூலம் தேவன் தம் நோக்கங்களை நிறைவேற்றுகிறார். ஆபிரகாம் ஈசாக்கை பலிபீடத்தில் ஒப்புகொடுத்தார் (ஆதியாகமம் 22). அண்ணால் சாமுவேலை ஒப்புகொடுத்தார் (1 சாமுவேல் 1). கர்த்தராகிய இயேசு தம்மையே கொடுத்தார் (பிலிப்பியர் 2:5-8).

ரோமர் 12:1 இந்த ஆளுகைக் கொள்கையைப் காண்பிக்கிறது:

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.”

கவனிக்கவும்-தேவன் வசதிக்காகக் கேட்பதில்லை; அவர் ஒப்புகொடுக்குமாரு கேட்கிறார். மிகவும் திறமையானவர்கள், "நான் எதை வைத்திருக்க முடியும்?" என்று கேட்கபதில்லை. ஆனால் "தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற நான் என்ன ஒப்புகொடுக்க வேண்டும்?"

2. தியாகம் கூட்டத்திலிருந்து அழைப்பதை பிரிக்கிறது

பலர் இயேசுவைப் போற்றுகிறார்கள், ஆனால் சிலர் சிலுவையில் அவரைப் பின்தொடர்ந்தனர். சுயம் சாகடிக்கபடுவதை பற்றி அவர் பேசியபோது, ​​ஜனக்கூட்டம் மெலிந்து போனது (யோவான் 6:66). தியாகம் எப்பொழுதும் இலக்கை பற்றி தீவிரமானவர் மற்றும் ஆர்வமுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

கர்த்தராகிய இயேசு வெளிப்படையாக கூறினார்:

“பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.”‭‭லூக்கா‬ ‭9‬:‭23‬ ‭

உண்மையான சீஷத்துவத்திற்கு ஒரு செலவு உண்டு என்பதை மிகவும் திறமையான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தேவனின் ஒவ்வொரு உயர்வுக்கும் அதற்குரிய மரணம் தேவை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

3. தியாகம் ஆன்மீக அதிகாரத்தை உருவாக்குகிறது

வேதாகமத்தில் அதிகாரம் தலைப்பு மூலம் வழங்கப்படவில்லை; அது சரணடைதல் மூலம் போலியானது. அப்போஸ்தலனாகிய பவுல், "நான் அனுதினமும் சாகிறேன்" (1 கொரிந்தியர் 15:31) என்று அறிவித்தார்.

இந்த தினசரி மரணம் அசாதாரண அதிகாரத்தையும், சகிப்புத்தன்மையையும், பலனையும் உருவாக்குகிறது. பலர் "எரிதல்" என்று அழைப்பதை வேதம் அரைகுறை ஒப்புக்கொடுதல் என்று அழைக்கிறது. என் சுயம் இன்னும் சாகாமல் இருக்கும்போது, ​​அழுத்தம் அதிகமாகிறது. கிறிஸ்து ஆளுகை செய்யும் போது, ​​கிருபை நிலைத்திருக்கும்.

மிகவும் திறமையான நபர்கள் சத்துருவுக்கு ஆபத்தானவர்கள், ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே நற்பெயர், ஆறுதல் மற்றும் கைதட்டலுக்காக மறித்துவிட்டனர்.

4. சுய-பாதுகாப்பு என்பது இலக்கின் மறைக்கப்பட்ட எதிரி

பேதுரு இயேசுவை துன்பத்திலிருந்து பாதுகாக்க முயன்றார் - மேலும் கடுமையாக கண்டிக்கப்பட்டார் (மத்தேயு 16:22-23). ஏன்? ஏனெனில் சுய-பாதுகாப்பு பெரும்பாலும் புத்திசாலித்தனமாகத் தெரிகிறது, ஆனால் 

அது தேவனின் மீட்புத் திட்டத்தை எதிர்க்க முடியும்.

கர்த்தராகிய இயேசு நம்மை எச்சரித்தார், "தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோகிறான்" (லூக்கா 17:33).

பாதுகாப்பு கீழ்ப்படியாமையாக மாறும் போது அதை மிகவும் பயனுள்ள விசுவாசிகள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பை விட கீழ்ப்படிதலையும், ஆறுதலுக்கு பதில் அழைப்பையும், விருப்பத்தை விட நோக்கத்தையும் தேர்வு செய்கிறார்கள்.

5. தியாகம் பெருக்கத்தைத் திறக்கிறது

சிலுவை தோல்வியின் சின்னம் போல் தோன்றியது - ஆனால் அது உலகத்திற்கு இரட்சிப்பைப் பிறப்பித்தது. இது இராஜ்ஜியத்தின் பிரமாணம்: மரணம் பெருக்கத்திற்கு முந்தியது.

இந்த பிரமானத்தை பவுல் அறிந்திருந்தார்:
“கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.”
‭‭2 கொரிந்தியர்‬ ‭4‬:‭10‬ ‭

மிகவும் திறமையான மக்கள் தியாகத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அந்த வேதனையை தாண்டி வாக்குதத்ததை பார்க்கிறார்கள். சரணடைந்த வாழ்க்கையை தேவன் ஒருபோதும் வீணாக்குவதில்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.

இது பழக்கம் எண். 7 
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வாழ்பவர்கள் வாழலாம் - ஆனால் சரணடைந்து வாழ்பவர்கள் தலைமுறைகளை மறுருபமாக்குவார்கள்.

Bible Reading: Genesis 45-46
Prayer
பிதாவே, நான் என் வாழ்க்கையை புதிதாக ஒப்புக்கொடுக்கிறேன். சுய-பாதுகாப்பின் பிடியை உடைத்து, தினமும் என் சுயம் சாகிரதற்கு எனக்கு அதிகாரம் அளித்து, என் தியாகம் உமது மகிமைக்கு தலைமுறை தாக்கத்தை ஏற்படுத்தட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!!

Join our WhatsApp Channel


Most Read
● பயத்தின் ஆவி
● உங்கள் முழு திறனை அடையுங்கள்
● நாள் 37: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும்
● ஆவிக்குரிய பெருமையின் கனி
● தேவன் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்
● வேர்களை கையாள்வது
Comments
CONTACT US
Phone: +91 8356956746
+91 9137395828
WhatsApp: +91 8356956746
Email: [email protected]
Address :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
GET APP
Download on the App Store
Get it on Google Play
JOIN MAILING LIST
EXPLORE
Events
Live
NoahTube
TV
Donation
Manna
Praises
Confessions
Dreams
Contact
© 2026 Karuna Sadan, India.
➤
Login
Please login to your NOAH account to Comment and Like content on this site.
Login